சில நாட்களாக மீண்டும் எழுத வேண்டும் என்று ஆசை மனதில் ஏற்பட்டு இருந்தது. அலுவலக பணியின்
பளுக் காரணமாக எழுத முடியாமல் போயிற்று. இன்று எப்படியும் ஆரம்பித்துவிட
வேண்டும் என்று மனதில் கங்கனம் கட்டிக் கொண்டுவிட்டேன். எப்படியாவது
முயன்று தினம் தினம் சிறு சிறு பகுதிகளாக எழுதி சேகரித்து வாரம் ஒரு முறை வெளியிட வேண்டுமென்று
முடிவு செய்துள்ளேன், பார்ப்போம். நான்
எழுதுவதைப் படிப்பவர்களுக்கு அனுதினமும் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் உபயோகமாக இருக்க
வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி யோசிக்கையில்
எனக்கு மிகவும் பிடித்ததையே எழுதலாம் என்று தோன்றியது. அதாவது
மனிதர்களைப் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதையே
எழுதலாம் என்றும் முடிவும் செய்தேன்.
மனிதர்களின் வாழ்வுதான் இருப்பதிலே மிகவும் அதிக சுவாரசியமான ஒன்றாக நான் கருதுகிறேன். அதிலும் ஆணுக்கும்
பெண்ணுக்குமான உறவுகளில் அந்த ஸ்வாரசியத்திற்கு பஞ்சமேது?. வீடு,
அலுவலகம், கல்வியகம் என எங்கும் இவர்களின் உறவுகளில்
தினம் தினம் புதுப்புது அர்த்தங்கள், நட்புகள், காதல்கள், ஒற்றுமை, கிண்டல் கேலிகள்,
புரிந்துணர்வு, வெறுப்புணர்வு என சொல்லிக்கொண்டே
போகலாம். என்னதான் நாம் நம் தோழி / தோழனை
மற்றும் சக வயதொத்த எதிர்பாலினத்தவரை எவ்வளவுதான் புரிந்து வைத்திருந்தாலும்,
எல்லாம் பலபேருக்கு அவரவர்களின் கணவன் / மனைவியென்று
வந்துவிட்டால் போதும், அவர்களை மட்டும் நம்மால் புரிந்துக்கொள்ளவே
முடிவதில்லை. இதில் வெகு சிலரே பாக்கியம் செய்திருப்பார்கள்,
ஏனையோரைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை!! ஏனென்றால்
அவ்வாறானவர்களால்தான் இந்த பூவுலகமமே நிறைந்திருக்கிறது!!. ஆகையால்
இந்த இரு வேறு கிரகவாசிகளும் ஒன்று சேரும் கல்யாண வைபோகத்திற்கு பின் (அது எவ்வகையான கல்யாணமானாலும்) தங்கள் துணையைப் பற்றி
நன்கு புரிந்துக்கொள்ள, வாழ்வை இன்னும் இனிமையாக நட்த்திச் செல்ல,
இந்த தொடர் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இங்கு நான் எழுத இருக்கும் அனைத்தும் “மார்ஸிலுருந்து ஆண்களும், வீணஸிருந்து பெண்களும்” என்ற ஆங்கில புத்தகத்திலிருந்துதான்
என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த புத்தகத்திலிருந்து காப்பியடித்து
எழுதுவது பெரிய விசயமா என்று நீங்கள் நினைக்கலாம். எனக்கும் இது
தோன்றாமல் இல்லை, இருந்தாலும் இதை தமிழில் எளிமையாக எழுத முயற்சிக்கலாம்
என்று ஒரு எண்ணம்தான். இதற்கு தங்களின் ஆதரவு அளித்து என்னை ஊக்குவிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தொடரில் முழுவதும் ஆண்கlளை மார்ஸ்லிருந்து வந்தவர்களாகவும், பெண்களை வீனஸ்லிருந்து வந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இது அவர்களின் உண்மையான குணாதி\சயங்கள் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு எளிதாக இருக்கும்.
முன்பு ஒரு காலத்தில், ஆண்கள் மார்ஸ்லிருந்தாவாறு தொலைநோக்கி மூலம் வானத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது வீணஸ் கிரகத்தில் வாழும் பெண்களை அவதானித்தார்கள். அதே சமயம் பெண்களும் தொலைநோக்கி மூலம் மார்ஸ்லிருக்கும் ஆண்களை அவதானித்துக் கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் சைட் அடித்துக் கொண்டிருந்த கணத்திலேயே இருவரின் உள்ளேயும் ஒரு இனம்காண முடியாத ஒரு உணர்வு எழுவதை கண்டனர்.
இவரும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டனர். இதைதான் நாம் ஆங்கிலத்தில் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்று சொல்வதுமுண்டு.. உடனே நம் ஆண்கள் என்னதார்கள் தெரியுமா?. ஒரு பரக்கும் தட்டுப் போல் ஒரு விண்கலத்தை கண்டுபிடித்து, வீணஸ்க்கு பரந்துவிட்டனர். வீணஸிலிருக்கும் பெண்களும் மார்ஸிலிருந்து வந்த ஆண்களை நன்கு வரவேற்றனர். பெண்களின் உள்ளுணர்வு இம்மாதிரியான தருணம் வருமென்று ஏற்கனவே சொல்லிருந்த்து போலும்!
இந்த இருவரின் காதல் ஒரு மேஜிக் போன்று இருந்த்து. இருவரும் ஒன்றாக இருப்பதை மிகவும் சந்தோசமாக எண்ணினர்,
தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர், இருவரும் வெவ்வேறு உலகத்தை சேர்ந்தவராகினும் இருவருக்குள்ளும் இருக்கும் வேறுபாட்டை பகிர்ந்துக் கொள்வதில் நாட்டமிருந்த்து. இருவர்களுமாக பல நாட்கள் தங்கள் பற்றியும், தங்கள் குணாதிசயங்களை பற்றியும், உணர்வுகளை பற்றியும்,
விறுப்பு வெறுப்புகளை பற்றீயும் விரிவாக விவாதம் நட்த்தி தெரிந்துக் கொண்டனர்,
புரிந்து வைத்துக்கொண்டனர். இவர்கள் இவ்வாறாக பல வருடங்கள் காதல் வாழ்க்கையில் இன்பமுற்று இருந்தனர்.
பின்பு ஆணும் பெண்ணும் ஒரு நாள் சேர்ந்து பூமிக்கு செல்ல்லாம் என்று முடிவு எடுத்தனர்.
ஆரம்பத்தில் புதிய பூமியில் வாழ்க்கை இருவருக்கும் சுகமாகவும் அழகானதாகவும், புது அனுபவமாகவும் இருந்தது. பின்பொருநாள் எந்த மாயன் கண்பட்ட்தோ………!!! ஏலியன் கண்பட்ட்தோ………!!! தெரியவில்லை. இருவரும் (ஆணும் பெண்ணும்) எழும் போது ஒருவகையான மறதி அவர்களை ஆட்கொண்ட்து. அவ்ளோதான்.!! இருவரும் தாங்கள் இருவரும் வெவ்வேறு இட்த்தினை சேர்ந்தவர்கள் என்பதையே மறந்துவிட்டனர். இருவருக்குமான வேறுபாட்டையும் தாங்கள் இவ்வளவ்வு காலமாக கற்று சேகரித்து மனதில் வைத்திருந்த அனைத்தும் மறந்துவிட்டனர். அவ்ளோதான் ஓகயா………போயிந்தீ!..............போயேபோச்சு………..இட்ஸ் கான்…………… காக்கா ஊச்ச்ச்ச். !!! அந்த பொன்னான நாள்முதல் இன்றுவரை இந்த இருவேறு கிரக வாசிகளும் செய்யும் காமெடியும் அட்ராசிட்டியையும் தான் இந்த உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது…!!!!
இனி நாம் பார்க்கப் போவது இந்த இருவர்கள் இந்த பூமியில் எவ்வாறு புதிராக வாழ்கின்றனர், அவர்கள் எதை மறந்தனர், அவர்களின் புரிந்துணர்வு எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியே ஆகும்.